Header Ads



பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி, வழங்கியுள்ள 3 வாக்குறுதிகள்


தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் எனவும், மக்கள் ஆணை இன்றி மொட்டுவின் கைப்பாவையாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி, வாக்குறுதிகளை மக்களுக்காக முன்வைக்காமல் மொட்டு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தகைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மக்கள் ஆணையும்,மக்கள் நம்பிக்கையும் இல்லாத இந்த அரசாங்கத்திடம் தான்றோன்றித்தனமான அரசியலில் ஈடுபட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றும்,மக்களின் தேர்தல் உரிமையில் தலையிட்டால் அதற்கு எதிராக வீதியில் இறங்குவோம் என்றுமே கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


இந்தத் தேர்தல் உரிமையை ஒத்திவைக்க ஆதரவளித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (21) நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.