Header Ads



300 மில்லியன் ரூபா அவசியம், 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்குமாறு கோரி இன்றைய தினம் நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . 


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார் . 


உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபா அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார் . 


எனினும் , இதுவரை 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . 


அத்துடன் எதிர்காலத்தில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . 


இதன்படி , தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹோ தெரிவித்துள்ளார் . 


No comments

Powered by Blogger.