Header Ads



200 பேரை நீக்கிவிட தீர்மானம்


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுமார் 200 உறுப்பினர்களை நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.


கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சில ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தற்போது எதிர்வரும் தேர்தலில் ஏனைய அரசியல் கூட்டணிகளின் கீழ் போட்டியிட தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய அரசியல் கூட்டணிகளின் கீழ் போட்டியிடத் தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிட்டத்தட்ட 200 உறுப்பினர்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அந்த கட்சி உறுப்பினர்களை நீக்கி புதிய உறுப்பினர்களை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.


நேற்று பதுளையில் நடைபெற்ற தேர்தலுக்கான கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்களின் ஒன்றுகூடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.