Header Ads



கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரணில் தலைமை தாங்கும் UNP யுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பதிலாக சும்மா இருக்கலாம்


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை என மாத்தளை மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தீர்மானித்துள்ளனர்.


கடந்த தேர்தலில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசியகட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்து விடலாம் என மாத்தளை மாநகர சபயின் பிரதி மேயர் அமில நிரோஷன் தெரிவித்துள்ளார்.


இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட முடியும். எனினும் நாட்டின் இளைஞர்கள் கோரிய அமைப்பு ரீதியான மாற்றத்தை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்பதால் வழங்க முடியாது.


இதனால், புதிய சின்னத்தில் வாக்காளர்களிடம் செல்வது நாகரீகமானது. அரசியல்வாதிகளால் வாக்காளர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துக்கொள்ள முடியாது எனவும் அமில நிரோஷன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.