Header Ads



கணவன்- மனைவி உறவு, தற்போது அனைவருக்கும் தெரியும்


ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் உண்மை முகம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மொட்டுக்கும் இடையிலான கணவன்- மனைவி உறவு தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்களின் உண்மையான அபிப்பிராயத்துக்குப் பயந்து அரசாங்கம் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க முயல்வதாகவும் நேற்று மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.