Header Ads



சகோதரர் பற்றிய கேள்வியால், ஆத்திரப்பட்ட டட்லி சிறிசேன


மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், இலங்கையின் பிரதான தொழிலதிபர். மிகப் பிரமாண்ட அரிசி ஆலை, காணி விற்பனை, ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து, இலங்கையின் பிரமாண்ட தொழிலதிபராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன விளங்குகின்றார்.


நாடு முழுவதும் அரிசி தேவையில் பெரும் பகுதியை, டட்லி சிறிசேன விநியோகித்து வருகின்றமையின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றார். இவ்வாறான பல்வேறு துறைகளின் தடம் பதித்து, மிக செல்வந்தராக காணப்படும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன, தனது மூத்த சகோதரனான மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டார்.


ஊடகவியலாளர் :- ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் அண்ணாவிற்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீங்களா பணம் வழங்க போகின்றீர்கள்?


டட்லி சிறிசேன :- நீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. தம்பியிடமிருந்து பணத்தை பெற்று, நட்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. தேவையற்ற கேள்விகளை என்னிடம் எழுப்ப வேண்டாம்.


ஊடகவியலாளர் :- அப்படியென்றால், அவருக்கு அந்தளவு தொகையை செலுத்த முடியுமா?


டட்லி சிறிசேன :- அதனை அவரிடமே கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பது குறித்து நான் கவலை அடைகின்றேன்.

No comments

Powered by Blogger.