கொழும்பு மேயர் வேட்பாளராக, முஜிபுர் ரஹ்மானை பிரகடனப்படுத்தினார் சஜித்
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், களமிறக்கப்பட உள்ளார்.
சற்றுமுன் சனிக்கிழமை, 14 ஆம் திகதி, இரவு, கொழும்பில் இடம்பெற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா, இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் தேர்தல் உறுதிப்படுத்தப்பட்டவுடன், முஜிபுர் ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment