Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக, நியமிக்கப்படுகிறார் பௌஸி



- AAM. Anzir -


எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மேயர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.


எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற உயர்நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டினால், முஜீபுர் ரஹ்மான தனது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்.


இந்நிலையில் வெற்றிடமாகும் அப்பதவிக்கு, கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தோல்வியடைந்த, முன்னாள் அமைச்சர் பௌஸி, வரிசை கிரமத்தின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆகவுள்ளார்.


இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.


No comments

Powered by Blogger.