Header Ads



நிதிப் பற்றாக்குறை - ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம்


ஜனவரி மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு உரிய வங்கிக் கிளைகளில் நேற்று(11) வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.


திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு மாதாந்தம் 2,600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.