Header Ads



சஜித் மீது, பொன்சேக்கா தாக்குதல்


பஸ்களை செலுத்துவதன் மூலமோ அல்லது பஸ்களுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராக முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


பஸ்களை செலுத்துவது தலைவர் ஆகுவதற்கான தகுதி இல்லை என்றும் (சஜித்) பஸ்ஸொன்றை நன்கொடையாக வழங்கி, அதை செலுத்தியதன் மூலம் ஓரளவு திருப்தியடைய வேண்டும் என்றார்.


பஸ்களை செலுத்துவதன் மூலமோ அல்லது பஸ்களுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராக முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான விடயங்கள் நாட்டின் அரசியல் கலாசாரத்துடன் செல்வதாகவும் இந்த அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.