Header Ads



பாராளுமன்றத்தில் இன்று சட்டம் நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஒத்திவைக்கப்படும் - பெப்ரல்


தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று -19- நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக , சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 


அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார் . 


சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும், குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டு இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் . 


தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது . 


அதன்படி இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.