Header Ads



காயமடைந்த 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி


2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறான விபத்துக்களில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சனிக்கிழமை (31) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (01) நண்பகல் வரையிலான காலப் பகுதியிலேயே குறித்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.


பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 4 பேரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.