Header Ads



ஸ்பெயினை வீழ்த்திய மெரோக்கோ, வரலாற்றில் முதன்முறையாக கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி

 



உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு மொரோக்கோ  அணி தகுதி பெற்றது.

இன்று -05- நடைபெற்ற போட்டியொன்றில் ஸ்பெய்னை பெனல்டி முறையில் 3:0 கோல்களால் மொரோக்கோ வென்றது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. மேலதிக 30 நிமிட ஆட்டம் நேரம் வழங்கப்பட்டு, அதிலும் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.

அதன்பின் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 

இதில் 3:0 கோல்கள் விகிதத்தில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது

உலகக்கிண்ண  கால்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக மொரோக்கோ கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


No comments

Powered by Blogger.