Header Ads



பெண் காதிகள் வேண்டாம், பல­தார திருமணத்தை நீக்­கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைளுடன் நீதியமைச்சரிடம் மகஜர்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


‘பெண் காதி­நீ­தி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட முடி­யாது. அவ்­வாறு நிய­மிப்­பது எமது மார்க்க வழி­காட்­ட­லுக்கு முர­ணா­னது. அத்­தோடு பல­தார மணம் எமது சட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­படக் கூடாது’ எனும் கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரொன்­றினை ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பு நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­துள்­ளது.


குறிப்­பிட்ட கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘பல­தார மணத்திற்கு மார்க்க அறி­ஞர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக நிபந்­த­னை­களின் கீழ் அனு­மதி வழங்­கலாம்.


பெண் காதி­களை நிய­மித்தல் என்­பது இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­ப­டாத ஒரு விடயம். இது பெண்­க­ளுக்கு எதி­ரான ஒரு பார­பட்சம் எனக் கொள்­ளக்­கூ­டாது.


திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தெல்­லை­யாக 18 வயதை நிர்­ண­யிக்­கின்­ற­போது விஷேட சந்­தர்ப்­பங்­களில் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வா­றான விதி­வி­லக்கு வாசகம் ஒன்று கட்­டாயம் உரு­வாக்­கப்­பட வேண்டும். விதி­வி­லக்கு வாசகம் என்­பது இள­வ­யதில் பெண் பிள்­ளை­க­ளுக்குத் திரு­மணம் செய்து வைப்­ப­தற்­கான ஏற்­பாடு அல்ல. மாறாக விசேட சந்­தர்ப்­பங்­களில் 18 வய­துக்கு முன்னர் திரு­மணம் செய்து வைக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டு­கின்­ற­போது மாத்­திரம் காதியின் அ-னு­ம­தியைப் பெற்று திரு­மணம் செய்து வைப்­ப­தற்­கான ஏற்­பா­டாகும்.


திரு­ம­ணத்தில் மண­ம­களின் சம்­மதம் பெறப்­ப­டு­வ­தற்­கான பொறி­மு­றை­யாக உள்­வாங்­கப்­ப­டலாம். ஆனால் அது ‘வொலி’ யின் சம்­மதம் என்ற அவ­சி­யத்தை இல்­லா­ம­லாக்­கக்­கூ­டாது.


வழக்­காற்று திரு­ம­ணங்கள் சட்­டத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். இறை­வனால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிக்­காஹ்வை சட்டம் வலி­தற்ற திரு­மணம் எனக் கூறு­வது தவறு. மேலும் சட்டம் அவ்­வாறு கூறு­மானால் அதனால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது பெண்­களும், அத்­தி­ரு­ம­ணத்தில் பிறக்கும் குழந்­தை­க­ளுமே.


காதி­நீ­தி­மன்றம் என்ற சொல்­லாடல் சட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட முடி­யாது. இது இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய ஒரு நூற்­றாண்­டு­கால அடை­யா­ள­மாகும்.


காதி­நீ­தி­மன்­றத்தில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டுகள், அந்த நீதி­மன்ற முறை­மை­யினை மேம்­ப­டுத்­து­வ­தைக்­க­ருத்திற் கொண்டு சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வேண்­டுமே ஒழிய, அக்­கு­றை­பா­டு­க­ளைக்­ கா­ரணம் காட்டி நீதி­மன்­றங்­களின் அதி­கா­ரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு தரவிறக்கம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.


நீதியமைச்சருக்கு இவ்விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்கென அமைக்கப்பட்டு அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சரினால் நிராகரிக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

No comments

Powered by Blogger.