Header Ads



வரிசைகளில் காத்திருக்காது ரயில், சீட்டுகளை பெற புதிய வேலைத்திட்டம்


வரிசைகளில் காத்திருக்காது ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இந்த செயற்றிட்டம் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படவுள்ளது. 


இந்த புதிய செயற்றிட்டத்தின் கீழ் 03 பிரதான வழிமுறைகளின் ஊடாக பொதுமக்கள் ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் W.A.B.S.E.குணசிங்க தெரிவித்தார். 


பயணச்சீட்டுகள் இணையத்தளம், தன்னியக்க இயந்திரம் மற்றும் முற்கொடுப்பனவு அட்டை ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 


மேலும், இந்த செயற்றிட்டத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.