Header Ads



அரகலய போராட்டக்காரர்களுக்கு, அமைச்சரின் சவால்


உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதில் சில சிக்கல்கள் இருந்த போதிலும் நடந்த முடிந்த முதல் சந்தர்ப்பத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் போராட்டகாரர்கள் அனைவரும் போட்டியிட்டு தமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.


ரெட்டா, பெட்டா மட்டுமல்லாது தொலைக்காட்சிக்குள் புகுந்து போதனை நடத்தியவர்களும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சமூகத்திற்குள் தமக்கு இருக்கும் பலத்தையும் வரவேற்பையும் காட்ட வேண்டும்.


முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்ட தமது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். TW

No comments

Powered by Blogger.