Header Ads



மாணவனின் வீட்டுக்குச் சென்ற, ஆசிரியைக்கு விளக்கமறியல் - நடந்தது என்ன..?


15 வயதுடைய மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 42 வயதுடைய தாய் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும்,  தாயின் சகோதரியிடமே (சித்தி) பாதிக்கப்பட்ட மாணவன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மாணவனின் சித்தி வீட்டை விட்டுச் சென்றபோது, ​​சந்தேகநபரான ஆசிரியை வீட்டுக்கு வந்துள்ளார்.


இதன்போது சித்தி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது, மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக இருப்பதையும், மாணவனுக்கு ஆசிரியை முத்தம் கொடுப்பதையும் கண்ட சித்தி வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.


மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் தொலைபேசிக்கு ஆசிரியை காதல் வார்த்தைகள் கூறி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். TM

No comments

Powered by Blogger.