Header Ads



மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட யுவதி - GPS மூலம் சிக்கினார்


களனி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


களனி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடும் நோக்கில் நேற்று முற்பகல் வந்த தம்பதி, வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவி ஊடாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீகஹாவத்தை கந்துபொட பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுப்பிடித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.