Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் வெட்டிக் கொலை


மட்டக்குளிய பீரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . 


அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . காரில்  வந்த இருவர் , இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது . 


உயிரிழந்த நபர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது . இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் . Hiru

No comments

Powered by Blogger.