Header Ads



பிரியமாலிக்கு கிடைத்த ஏமாற்றம்


திக்கோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று -02- உத்தரவிட்டுள்ளது.


பிணைமுறி சட்டத்தின் 14(1)(பி) பிரிவின் கீழ் திலினி பிரியமாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதவான் திலின கமகே நிராகரித்தார்.


திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயிடம், முன்னிலைப்படுததப்பட்டார்.


இந்தநிலையில் அவரையும், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.