Header Ads



கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலய கர்ப்பிணிப் பெண்னான ஆசிரியை விபத்தில் மரணம்


கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.


உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிகின்றார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.