Header Ads



பாராளுமன்றத்திற்குள் பதற்றம் - லன்சாவை தாக்க முயற்சி, வெளியேற்றப்பட்டார் விஜேசிறி


ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை பாராளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்.


மேலும், இன்றைய சபை அமர்வுகளில் அவரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் சபாநாயகர் அறிவித்தார்.


பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 79இற்கு அமைவாகவே இந்த கட்டளையை சபாநாயகர் பிறப்பித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்குவதற்கே அவர் முயற்சித்துள்ளார்.

No comments

Powered by Blogger.