Header Ads



சவூதி அரேபியாவில், இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு


சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் நிர்மாணத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கையர்களை இணைத்துக் கொள்வதற்கான தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்தப் பணியை மேற்கொள்கிறது.


கட்டட வடிவமைப்பாளர்கள், சிவில் பொறியியலாளர்கள், நில அளவையாளர்கள் போன்றவர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு கூடுதலாக காணப்படுகிறது.


இந்தத் துறைகளில் பணியாற்ற ஆர்வம் காட்டுவோர் பணியகத்தின் இணையதளத்திற்குச் சென்று தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்.


இது தொடர்பான மேலதிக தகவல்களை 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

No comments

Powered by Blogger.