Header Ads



ஆசிரியைகள் மீதான ஆபாசமான கருத்துக்கள் குறித்து அமைச்சர் அதிர்ச்சி


பேஸ்புக் ஊடாக பெண் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில்  (26) தெரிவித்தார்.


சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளதாகவும் அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கல்வி அமைச்சர், சாரி அணிவது அவசியம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.