Header Ads



விரட்டியடித்தாலும் போக மாட்டேன்


தம்மை அடித்தாலும், விரட்டியடித்தாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தீர்மானித்தது.


எனினும் எங்களை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு போக மாட்டோம் என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். TW

1 comment:

  1. இவருக்கு அடிக்கவோ,விரட்டவோ தேவையில்லை. ஒரு லீட்டர் சுடுநீருக்கு 500 கிரா500மிளகாய் தூளும்,150 கிரா150 தும்மள பவுடரும் நன்றாகக் கலந்து தலையில் ஊற்றுங்கள். பிறகு என்ன நடக்கும் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.