Header Ads



ரூபவாஹினி பண விவகாரம் - அமைச்சர் வௌிநாடு போக, தடைபோட்டது நீதிமன்றம்


அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத் தடை விதித்தது. 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணத்தை பயன்படுத்தி GI குழாய்களை கொள்வனவு செய்து, வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை கையளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று  குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.


குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.


இவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.


இந்த வழக்கு பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

No comments

Powered by Blogger.