Header Ads



பேராதனை பல்கலைக்கழக மாணவியின், உடற்பாகங்கள் பேராதனை வைத்தியசாலைக்கு


பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிந்துள்ளார்.

சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை  பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கடந்த முதலாம் திகதி சச்சினியும் அவரது இரண்டு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர்.


விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி - பெற்றோர் எடுத்த நடவடிக்கை | A University Student Died In An Accident


இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சச்சினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  உயிரிழக்கும் போது அவருக்கு 23 வயது.


குறித்த யுவதி தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  


1 comment:

  1. இந்த இளம் பிள்ளையை இழந்த பெற்றோர் அந்த இழப்பில் ஆழ்ந்த கவலையும் சொல்லொனத் துயரத்தையும் அனுபவிக்கும் போது இந்த நாட்டில் நோயால் வாடும் மனிதர்களை தங்கள் பிள்ளையின் உடலுறுப்புகளைப் பாவித்து அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் உயர்ந்ததும் மிகவும் கண்ணியமாக அவரகள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை இந்த நாட்டு மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். இதுதான் மனித உணர்வுகளில் மிகவும் உயர்ந்த கண்ணியமான உணர்வு. இது கண்டிப்பாக உரியமுறையில் மதிக்கப்பட வேண்டும். இந்தப் பெண்மனிக்கு அல்லாஹ் அருள்பாலிக்க நாமும் பிரார்த்தனை செய்கின்றோம். இந்த பெண்ணின் பெற்றோரைப் போன்ற பல ஆயிரம் பெற்றோர்கள் எம்மத்தியில் உருவாக வேணடும் எனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.