Header Ads



தென்கொரியாவில் மற்றுமொரு இலங்கையர் மரணம்


தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.


பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே துரதிஷ்டவசமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரியாவில் வேலைக்காக சென்றிருந்ததாகவும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது கயிற்றில் சிக்கி கடலில் விழுந்து  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த நபர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஊர்பொக்க பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.