Header Ads



60 வீதமான இலங்கையர்கள் வேறு நாட்டிற்கு செல்ல திட்டம் - எந்நாட்டுக்கு பறக்க விரும்புகின்றனர் தெரியுமா..??


இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் , வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளனர் . 

அவர்களில் , பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு , முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர் . 


நாட்டின் கடன் தொடர்பாக , பெரும்பாலான இலங்கையர்கள் குறிப்பாக 37 வீதமானோர் , பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கைக்கு உதவும் என்று நம்புகின்றனர் .


 24 வீதமானோர் , இந்தியா இலங்கைக்கு உதவும் என்றும் 14 வீதமானோர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஜப்பான் உதவும் என்று நம்புகின்றனர் . 


நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகுவதை பெரும்பான்மையான 61 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் . 


இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு ர்வுக்காணும் விடயத்தில் 57 வீத இலங்கை மக்கள் மத்தியில் , மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு நன்மதிப்பு உள்ளது . 


இதனையடுத்து நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவின் மீது 45 வீத மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர் .


நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா , 43 வீத பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறா

No comments

Powered by Blogger.