Header Ads



கட்டார் உலகக் கிண்ணத்தில் 5 புதிய விதிகள்


கட்டாரில் ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உலகக் கிண்ணத்தில் முன்னர் காணாத ஐந்து விதி மாற்றங்கள் பின்வருமாறு,


விதி 01 – போட்டி ஒன்றில் ஐந்து மாற்று வீரர்கள் பயன்படுத்தப்படும் முதல் உலகக் கிண்ணமாக இது உள்ளது. போட்டி முழுவதிலும் மூன்று சந்தர்ப்பங்களில் இந்த மாற்று வீரர்களை பயன்படுத்த முடியும். இது அதிகமான திறமைகளைக் கொண்ட அணிகளுக்கு சாதகமானது.


விதி 02 – வழக்கமாக 23 வீரர்களைக் கொண்ட குழாமே இடம்பெறும் நிலையில் இம்முறை 26 வீரர்கள் கொண்ட குழாம் உலகக் கிண்ணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


விதி 03 – தண்டனை உதையின்போது, கோல் காப்பாளர் கோட்டில் காலை வைத்திருக்க முடியும். இது உலகக் கிண்ணத்தில் முதல்முறை.


விதி 04 – பகுதி தானியங்கி ஓப்சைட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஒன்றாக இருப்பதோடு ஓப்சைட் அழைப்பின்போது ஏற்படும் சராசரி நேரத்தை 70 விநாடியில் இருந்து 20 விநாடி வரை குறைக்கும்.


விதி 05 – ஆடவர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெண் நடுவர்கள் இடம்பெறுவது இது முதல்முறையாகும்.

No comments

Powered by Blogger.