Header Ads



220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்குவோம் - சஜித் தெரிவிப்பு


எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், அந்தக் குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பல்வேறு உபாய வார்தைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக புதிய மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும்,தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் மக்கள்  அபிப்பிராயத்திற்கு செவிசாய்த்து, அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியதே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


உரிய காலத்தில் அந்தந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தந்திர உத்திகளை கையாண்டு தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு என்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்திருந்தார்.


அவரது அந்த அறிக்கைகள் இன்றும் செல்லுபடியாகும் என்றால்,எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் பதவியைப் பெற்று தேர்தலை ஒத்திவைக்கும் தந்திர உத்தியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.


இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் எனவும்,மக்கள் கோரிக்கை விடுப்பது தேர்தலே என்பதால் அதை வழங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் 220 இலட்சம் மக்களுடன் வீதியில் இறங்கி தேர்தலை சந்திப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டம்,அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.