Header Ads



இலங்கை கடல் கொள்ளையர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக புதுச்சேரி மீனவர்கள் குற்றச்சாட்டு


இலங்கையின் கடல் கொள்ளையர்களால், இந்திய புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


புதுச்சேரி , காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது , இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


4 படகுகளில் வந்த இலங்கையின் கடல் கொள்ளையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். 


இதன்போது அவர்கள் புதுச்சேரி கடற்றொழிலாளர்களின் வலைகளை பறித்துச் சென்றதாக தமிழக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது . 

No comments

Powered by Blogger.