Header Ads



திலினி பிரியமாலி குறித்து வெளியாகியுள்ள மற்றுமொரு தகவல்


நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தனது வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எந்தவித வருமான வரியையும் வழங்கவில்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


அந்த வகையில் அவர் குற்றமிழைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.


நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு உலக வர்த்தக மையத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.


லோரன்ஸ் செல்வநாயகம் 

No comments

Powered by Blogger.