Header Ads



மஹிந்தவின் முன் கண்ணீர்விட்டழுத ரோஹித - பேஸ்புக்கில் பின்னூட்டம் இடுவதை தடுத்தார்


முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களுத்துறையில்  (08)  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. 


இந்த கூடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது,  மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.


அன்றை தினம் எனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது அதிஷ்டவசமாக எனது தாயார் உயர் தப்பினர் என அவர் தெரிவித்துள்ளார். 


அதேவேளை  பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனஇ கண்ணீர் விட்டு அழுத சம்பவத்தை வீடியோ வடிவில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தாலும், அதற்குக் கீழ் எவரும் பின்னூட்டம் இடுவதை தடுத்து வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.