Header Ads



அடம்பிடிக்கும் ஞானசாரர்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’  எனும் ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தில்லை என்று தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் இறுதி அறிக்­கையில் எந்­தவோர் இனத்­தையும் மதத்­தையும் இலக்­காகக் கொண்ட பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­யில்லை என அதன் தலைவர் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.


அதனால் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.


ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என மறுத்­துள்ள நிலையில் அவரின் தீர்­மா­னத்­துக்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலேயே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.


செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட சில அர­சியல் கட்­சிகள் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­மையால் அரசு இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது. என்­றாலும் அறிக்­கையில் தவ­றான பரிந்­து­ரைகள் எதுவும் உள்­ள­டங்­கி­யில்லை. அப்­ப­ரிந்­து­ரைகள் மிகவும் சிறந்­த­வைகள். நல்­லதோர் அறிக்கை. அறிக்கை எந்­தவோர் மதத்­தையோ குறிப்­பிட்ட இனத்­தையோ இலக்கு வைத்து தயா­ரிக்­கப்­ப­ட­தல்ல. அதனால் அறிக்­கையை விமர்­சிப்­ப­வர்கள் முதலில் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்­ள­வற்றை வாசித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.


அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘அறிக்­கையில் முஸ்லிம் சமூகம் உட்­பட சிறு­பான்­மை­யி­னரின் சில சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்கும் வகையில் பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக சில கட்­சிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளன. ஆனால் இவ்­வா­றான பரிந்­து­ரைகள் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யில்லை. பரிந்­து­ரைகள் அனைத்து மதங்கள் மற்றும் இனங்­க­ளுக்கு பொருந்தும் வகை­யிலே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே அர­சாங்கம் இப்­ப­ரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த வேண்டும்.


சில அர­சியல் கட்­சிகள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­பன ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்கை தொடர்­பாக அண்­மையில் எதிர்­ம­றை­யான கருத்­து­களை வெளி­யிட்­டி­ருந்­தன. இதே­வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த அறிக்­கையை நீக்­கி­வி­டு­மாறு கோரி­யுள்­ளது என்றார்.


இந்­நி­லையில் தற்­போ­தைய நாட்டின் நெருக்­க­டி­யான நிலையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக் கருவை செயற்­ப­டுத்­து­வ­தை­விட அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டிய பல முக்­கிய பிரச்­சி­னைகள் உள்­ளன. அவை முதலில் தீர்க்­கப்­பட வேண்­டு­மென பொது­வான கருத்து நில­வு­கி­றது.


‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­ப­தி செய­ல­ணியின் இறுதி அறிக்கை கடந்த 2022 ஜூன் மாதம் 29ஆம் திகதி அதன் தலைவர் ஞான­சார தேர­ரினால் அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.


8 அத்­தி­யா­யங்­களைக் கொண்ட இவ்­வ­றிக்கை 43 பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் புத்­தி­ஜீ­விகள், மதக் குழுக்கள், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள், சட்ட வல்­லு­னர்கள், பல்­வேறு சமூக பிர­தி­நி­திகள்,பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கி 1200 பேரின் சாட்சியங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.-

1 comment:

  1. இவன் ஒருஜினல் காபிர், முனாபிக், முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்தும் வியாபாரத்துறைகளிலிருந்தும் துரட்சி பண்ண வேண்டும் என்ற ஒரே நோக்கில் இயங்குபவன், அதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள முனாபிக்குகள் அவனுக்குத் துணைபோகின்றனர்,அது அவனுக்கு சக்தியையும் பலத்தையும் கொடுக்கின்றது. இந்த சமூகம் கறுப்பு நிறத்தையும் வௌ்ளை நிறத்தையும் சரியாகப் புரிந்து அதற்கேற்ப செயற்படும் வரை இந்த சமூகத்துக்கு ஒரு நாளும் இந்த நாட்டில் விடிவு கிடையாது. இந்த சைத்தானின் பொய்ச் செய்திகளைப் பிரசுரிப்பது அவனுக்குத் துணை போவதாகவே கருதப்படும் என்பதையும் இணையத்தளத்துக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.