Header Ads



ஹிருணிகா தெரிவித்துள்ள விடயம்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி இந்த மாத இறுதியில் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். 


நாட்டின் தற்போதைய அதிபரின் ஆட்சியை நிறைவு செய்யும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்மை எந்த விதத்தில் பாதுகாத்துக்கொள்ள முயன்றாலும் அவரால் அதை செய்ய முடியாது.


மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க அதிபர் எடுக்கும் முயற்சிகளும் இந்தத் தடவை தோல்வியடையும் எனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.