Header Ads



மகிந்த ராஜபக்ச இதை, உடனடியாகச் செய்ய வேண்டும் - சஜித்


உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மகிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.


ஊடகங்களிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்நிலையில் ராஜபக்சர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இன்னும் முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்காமல் நாட்டை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.


ராஜபக்சர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்க முயல்கின்றனர். இது மீண்டும் நாட்டை அழிப்பதற்கான முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.