Header Ads



தாய் இறந்த சோகத்தில்


தாய் இறந்த சோகத்தில் மகன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ். நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது - 32) என்பவரே நேற்று முன்தினம் (27) உயிர் மாய்த்துள்ளார்.


இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். தாயார் உயிரிழந்த நிலையில், தாயாரின் பிரிவால் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்ட இவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார்.


யாழ்.விசேட நிருபர்

No comments

Powered by Blogger.