Header Ads



ஜெனீவா புதிய தீர்மானத்தின் அடிப்படையில், ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணை, இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்கும், வடக்கு - கிழக்கில் ஏற்பட்ட மோதலின் பின்னர் காணி மற்றும் காணாமல் போனவர்கள் முயல்வதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உபகுழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


20 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிய நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தநிலையல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.


அதேநேரம் நல்லிணக்கத்தை அடைவதற்காக தனது சொந்த, உள்நாட்டுப் பொறிமுறைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.

No comments

Powered by Blogger.