Header Ads



நீர்கொழும்பு நீதவானின் அதிரடித் தீர்ப்பு


மது போதையில் வேனை செலுத்தி, 36 வயது பெண்ணுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் தடைசெய்து நீர்கொழும்பு நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று (19) உத்தரவிட்டார்.


அத்துடன், 6 குற்றச்சாட்டுகளுக்கு 199,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், விபத்தில் மரணித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் கட்டளையிட்டார்.


நீர்கொழும்பு, தலாதுவ வீதியில் 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.