Header Ads



நான் கூறியபடி செயற்பட்டிருந்தால், கோட்டாபயவே தற்போதும் ஜனாதிபதி


ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.


இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் டயான கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக, இந்த தகவல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


நான் கூறியபடி செயற்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவியில் இருந்திருப்பார். எவ்வாறாயினும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள நான் சில நிபந்தனைகளை முன்வைத்தேன்.


இந்த சந்திப்பின் பின்னர், கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். பின்னர், என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசிய கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக என்னை நியமிப்பது சம்பந்தமாக மகிந்த ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் அஞ்சுவதாகவும் தனக்கும் ஒரு வித பயம் இருக்கின்றது எனவும் கூறியதாக சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.