Header Ads



ஆட்டோவை பற்றிக் கொண்ட தீ - நடு வீதியில் சம்பவம்


- ரஞ்சித் ராஜபக்ஸ -


ஒரே குடும்பத்தினர்  பயணித்த  ஓட்டோவொன்று இன்று  (25) பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.


ஓட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே ஓட்டோவை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியா பொலிஸார், இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.ரஞ்சித் ராஜபக்ஸ


ஒரே குடும்பத்தினர்  பயணித்த  ஓட்டோவொன்று இன்று  (25) பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.


ஓட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே ஓட்டோவை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியா பொலிஸார், இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.