Header Ads



7 நாட்களாக காய்ச்சலுடன், சளி - எட்டு மாத குழந்தை உயிரிழப்பு


- எம்.றொசாந்த் -


யாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 


கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16) உயிரிழந்துள்ளது. 

No comments

Powered by Blogger.