Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 70 வது ஊடகக் கருத்தரங்கு


 (அஷ்ரப் ஏ சமத்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 70வது ஊடகக் கருத்தரங்கு 21வது நுாற்றாண்டில் ஊடகம் உலகம் எனும் தலைப்பில் வறாக்காப்பொல பிரதேசத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிரேஸ்ட மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கு வராக்காப்பொல பாபுல் ஹசன் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் சிரேஸ்ட ஊடகவியலாளருமான புர்ஹான் பீபி இப்திக்காா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வினை ஜ.ரீ.என். வசந்தம் தொலைக்காட்சி சிரேஸ்ட செய்தி ஆசிரியா் சித்தீக் ஹனிபா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் ஏற்பாடு செய்திருந்தது. இந் ஊடகக் கருத்திரங்கில் 200க்கும் மேற்பட்ட சிரேஸ்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.


இந் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளாின் சித்தீக் ஹனிபாவின் ஊடக சேவையைப் பராட்டி போரத்தினால், அவருக்கு பொன்னாடை போற்றி கௌவிப்பும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.