Header Ads



பாலியல் துன்புறுத்தல் செய்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை


பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு இன்று (19) நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பளித்தார்.


மேலும், தலா 15,000 ரூபாய் அபராதமும் செலுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


எம். ஜயரத்ன மற்றும் எஸ். விஜேசிங்க ஆகிய இருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பிரதிவாதிகள், பெண் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.