Header Ads



111 கைக்குண்டுகள் மீட்பு - செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் STF


- எம்.றொசாந்த்  -


யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. 


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.


இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.


இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று  இன்றைய தினம்   காலை 6மணி முதல்  யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால்  மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது   111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.


இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.  


 

No comments

Powered by Blogger.