Header Ads



சுதந்திரக் கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர் - சந்திரிக்கா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(04) செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்தது.


தற்போது அது அழிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இல்லை, கட்சியில் கொள்கைகளும், ஆட்களும் இல்லை. அதற்கு பதிலாக பெயர் பலகை மட்டுமே உள்ளது.


மேலும் எனக்கு கட்சி முக்கியமல்ல. கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம். எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.”என தெரிவித்துள்ளார்.


புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது.


இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Powered by Blogger.