Header Ads



டுபாய் சென்று திரும்பிய மனைவியினது தலையை, துண்டித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்


பணிப்பெண்ணாக துபாய் சென்று நாடு திரும்பிய தனது மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் ஒருவர் தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.


தம்புள்ளை - இத்தவெல்கொல்ல பகுதியில் நேற்றிரவு -04- இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்த பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கணவன் மனைவியினது தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கீதா குமாரி என்ற 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


சம்பவத்தையடுத்து சந்தேகநபரான கணவர் தனது பிள்ளைகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தானும் உயிரை மாய்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தமது வீட்டுக்கருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


அத்துடன், சடலம் மீட்கப்பட்ட மரத்துக்கு கீழ் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கூரிய ஆயுதம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்த பெண் கணவருக்கு தெரியாமல் கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிவதற்காக சென்று கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று நாடு திரும்பியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.