Header Ads



ஊருக்குள் கொம்பன் வருவதால், பிள்ளைகளுடன் நிம்மதியாக தூங்க முடியாத நிலை - பயிர்களுக்கும் நாசம் விளைவிப்பு




- ஹஸ்பர் -


திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் 98ம் கட்டை தாயிப் நகர் மற்றும் 97 சேனாவளி குளத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் காட்டு யானை இரவில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


அதிகாலை,இரவு (04) முதல் தொடர்ந்தும் இந்த காட்டு யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 


வயல் நிலங்களுக்குள் தற்போது சிறுபோக அறுவடைக்கு தயாரான நிலையில் நெற் செய்கையை அழித்து விட்டுச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டு யானையானது தினமும் மாலை ஆறு மணிக்கே வயலுக்குள் புகுந்து ஊருக்குள்ளும் இக் கொம்பன் யானை வருவதால் சிறு பிள்ளைகளுடன் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.