Header Ads



வெள்ள அபாய எச்சரிக்கை - மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை


 அத்தனகலு ஓயா, களு கங்கை, களனி கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னறிவிப்புகளின்படி, இன்று இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.


அத்தனகலு, களு கங்கை, களனி கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியன ஏற்கனவே நீர் நிரம்பியுள்ளதால், அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அதிக மழை பெய்தால், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. 


இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு, குறித்த ஆற்றுப்படுகைகளில் வசிக்கும் பொதுமக்கள், அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments

Powered by Blogger.